ABOUT
history
கணபதி நாதரின் வரலாறு
வரணியில் ஓர் பிரசித்திபெற்ற விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு பொற்பத்தை எனும் தாவரங்கள் நிறையக் காணப்பட்டதாலும், அதனுடன் சேர்ந்து ஓர் பழமையான குளம் இருந்ததாலும், அங்கே அமைந்த இவ்வாலயத்திற்கு இப்பெயர் உண்டானதாக அறியப்படுகிறது. ஆலயத்தின் பழைய பெயர் இதுவே ஆகும். பழைய தொம்புகளிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் பல காலங்கள் கடந்த பின், அங்கு நாவல் மரங்கள் நிறையக் காணப்பட்டதால், பலராலும் இவ்வாலயம் நாவலடிப் பிள்ளையார் என அழைக்கப்பட்டு வந்தது.
இந்த ஆலயத்தில் வருடம் தோறும் 01-10 நாட்கள் திருவிழா வெகுமிமர்சையாக ஊர் மக்களின் பங்களிப்போடு நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் தினமும் காலை 07:30 am மற்றும் பிற்பகல் 04:30 pm பூசைகள் நடைபெறுகின்றன. மேலும் இவ்வாலயத்தில் மாதம் தோறும் வருகின்ற வளர்பிறை சதுர்த்தி,தேய்பிறை சதுர்த்தி விசேஷமாக நடைபெறுகின்றன. பிள்ளையார் கதை 01- 21 நாட்கள் வெகுமிமர்சையாக நடைபெறுகின்றன. இவ்வாலயத்தில் மெருகூட்டும் விதமாக திருவெம்பாவும் நடைபெறுகின்றன.
இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய சிறப்புகளால் மிகப் பெருமை வாய்ந்ததாக விளங்குகிறது.
